கொழும்பின் போதைப்பொருள் பாவனை அதிகமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இராஜகிரிய – ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, வெல்லம்பிட்டி – கொலன்னாவ, பொரளை – வனாத்த முல்ல, மொரட்டுவை – லுனாவ, முகத்துவராம் – மட்டக்குளி ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை, காவல்துறை விசேட அதிரடிப்படையினர் பல அரச நிறுவனங்கள் மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.