யாழ்,தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி சீதாலட்சுமி என்பவர் நேற்று (12) கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும்போது அவர் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது உயிரிழப்பு தொடர்பிலான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டதோடு, சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தினர்