வத்தளையில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பேரீச்சம்பழங்கள் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சபையினரால் அப் பகுதியில் நடத்தப்பட்ட பரிசோதனையின்போதே காலாவதியான 3620 கிலோகிராம் பேரீச்சம்பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பேரீச்சம்பழங்களின் பெறுமதி ரூபாய் 6.5 மில்லியன் ஆகும்.
தொடர்ந்து பேரீச்சம்பழங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.