ஐ. ஏ. காதிர் கான் – கஹட்டோவிட்ட அல் பத்ரிய்யா மகா வித்தியாலயத்திற்கு KPL பவுண்டேஷன் நிறுவனத்தால் விளையாட்டு உபகரணங்கள் இன்று (20) செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
அல் பத்ரிய்யா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள், இன்றைய (20) தினம் கஹட்டோவிட்ட பொது மைதானத்தில் ஆரம்பமாகின.
இதில் “கமர், நஜ்ம், ஷம்ஸ்” ஆகிய மூன்று இல்லங்களுக்கும் மாணவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இம்மூன்று இல்லங்களுக்கும் இடையேயான கிரிக்கட் போட்டிகளுடன், இன்றைய முதல் நாள் போட்டி நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியன..
இன்றைய கிரிக்கட் போட்டி ஆரம்பமாக முன்னர், KPL பவுண்டேஷன் சார்பாக பாடசாலைக்குத் தேவையான விளையாட்டு உபகரணத் தொகுதி ஒன்று, பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த நான்காம் திகதி நடைபெற்ற 13 ஆவது KPL சுற்றுப்போட்டிகளுக்காகத் திரட்டிய பணத்திலிருந்து அண்ணளவாக 35,000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை, KPL பவுண்டேஷன் தலைவர் முபீன் மதனி, பாடசாலை அதிபர் ஏ.எம்.எம். அஸ்மிரிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வில், பாடசாலை உதவி அதிபர் சாலிஹா மற்றும் ஆசிரியர்களான
ரம்ஸி அலி, ராம்ஸான் மற்றும் ரௌஷான் ஆகியோர்களுடன், KPL பவுண்டேஷன் சார்பாக சகோதரர் முபீன், இன்ஷார், பாஸித் மற்றும் ஷாகிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, 17 ஆம் திகதி மர்ஹூம் ரிஸ்வி பவுண்டேஷன் சார்பாகவும், மைதானத்திற்குத் தேவையான எல்லைக் கூம்புகள், அல் பத்ரிய்யா நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டன.
