உலக பாரம்பரிய தளமான சிகிரியா கண்ணாடிச் சுவரை சேதப்படுத்திய குற்றத்துக்காக நேற்று சிகிரியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட யுவதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தம்புள்ளை மாவட்ட நீதிபதி நிலந்த விமலரத்ன முன்னிலையில் இன்று (15) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே, அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த யுவதி சீகிரியாவில் உள்ள கண்ணாடி சுவரில் தமது ஹேர்பின்னை பயன்படுத்தி ஆறு ஆங்கில எழுத்துக்களை எழுதியதாக சந்தேகத்தின் பேரில் நேற்று (14) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.