இலங்கையில் கடந்த 6 மாதங்களில் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காய்ச்சல் அல்லது எலிக்காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொள்கிறார்கள்.
இந்த நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா முக்கியமாக எலிகளின் சிறுநீரில் உள்ளதால், கால்நடைகள், நாய்கள் மற்றும் பன்றிகளின் மலம் மற்றும் சிறுநீரில் இது இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோய்க்கான பாக்டீரியாக்கள் நீரில் கலந்த பிறகு, அது மனிதனின் கால்களில் உள்ள காயங்கள் மற்றும் கண்கள் மற்றும் வாயின் வழியாக மனித உடலில் நுழைகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் துஷானி தாபரே, ஒரு ஆண்டில் எலிக்காய்ச்சலால் 100 அல்லது அதற்கு மேற்பட்ட இறப்புகள் பதிவாகி வருவதாக தெரிவித்தார்.
மேலும் பல சமயங்களில் சிகிச்சை பெறாதவர்கள் உயிரிழப்பதாகவும் கூறிய டொக்டர், எலிக்காய்ச்சலுக்கு மருந்துகள் இருப்பதாகவும், முறையான சிகிச்சை பெற்று இந்த நோயை குணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
கால்களில் வெட்டுக்காயங்கள் அல்லது வேறு காயங்கள் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் இருப்பதாகவும்
மேலும் அசுத்தமான நீரில் முகம், வாய் அல்லது மூக்கைக் கழுவுவதன் மூலமும் பாக்டீரியாவை பரவலாம் என்று டொக்டர் மேலும் தெரிவித்தார்.
இரத்தினபுரி, காலி, கேகாலை, மாத்தறை, களுத்துறை, மொனராகலை, குருணாகலை போன்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், மாணிக்கக்கல் அகழ்வுத் தொழிலாளர்கள் மற்றும் கழிவுநீர், கால்வாய் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் எலிக்காய்ச்சல் அபாயத்தில் அதிகம் உள்ளதாகவும் டொக்டர் சுட்டிக்காட்டினார்.
அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு மக்கள் கோரப்பட்டுள்ளனர்.