எயார் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான5 விமான சேவைகள் அடுத்தடுத்து இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் இருந்து டுபாய் செல்லும் AI 915 விமானம், டெல்லியில் இருந்து வியன்னா செல்லும் AI 153 விமானம், டெல்லியில் இருந்து பாரீஸ் செல்லும் AI 143 விமானம், அஹமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லும் AI 159 விமானம் மற்றும் லண்டனில் இருந்து அமிர்தசரஸ் செல்லும் AI 170 விமானம் என 5 விமானங்களின் சேவையை எயார் இந்தியா இரத்துச் செய்துள்ளது.
இதுதொடர்பாக, எயார் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
விமானம் புறப்படுவதற்கு முன்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டிய விமான ஆய்வின்போது தொழில்நுட்ப கோளாறு ஒன்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
விமான சேவைகள் இரத்துச்செய்யப்பட்டதையடுத்து விமான பயணிகளுக்கு தங்குவதற்குரிய வசதிகளை வழங்கியிருக்கிறோம்.
பயணம் இரத்துசெய்யப்பட்ட நிலையில் முழு கட்டண தொகையையும் திருப்பித் தரவோ அல்லது பயணிகள் விரும்பினால் மீண்டும் விமான பயணம் மேற்கொள்ள வசதி ஏற்படுத்தவோ தயாராக உள்ளோம் என தெரிவித்தார்