2025 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என்று சிறிலங்கா கிரிக்கெட் 01.08.2025 வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இம்முறை ஆறாவது லங்கா பிரீமியர் லீக் தொடர் இடம்பெறவுள்ளது.
இந்த ஆண்டு போட்டிகள் கொழும்பு, பல்லேகலை மற்றும் தம்புள்ளை மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வரவிருக்கும் 2026 டி20 உலகக் கிண்ண ஒத்திகையாக இந்தக் காலகட்டத்தில் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.