யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, 23.06.2024 அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கைதான 18 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.