உறக்கமின்மை காரணமாக யாழ்ப்பாணத்தில் மூதாட்டி ஒருவர் இன்று (23) காலை தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியைச் சேர்ந்த புஸ்பவதி விஜயரட்ணம் எனும் 75 வயதான மூதாட்டியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
சில நாட்களாகவே குறித்த மூதாட்டி உறக்கமின்மையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.