இலங்கை மத்திய வங்கி 15.02.2024 அன்று 2024 ஆண்டு பெப்ரவரி மாத்திற்கான நாணயக் கொள்கை அறிக்கையினை வௌியிட்டது.
இவ்வறிக்கையின் உள்ளடக்கமானது முக்கியமாக 2024 ஜனவரி மாத மீளாய்வின் போது நாணயக் கொள்கைத் தீர்மானத்தினை உருவாக்குவதில் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையினால் பரிசீலனையிற்கொள்ளப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
பொருளாதாரம் தொடர்பில் குறிப்பாக, பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக முன்னோக்கிய பார்வையிலமைந்த நோக்குகளை வழங்கும் பொருட்டு மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட இரண்டாவது நாணயக் கொள்கை அறிக்கையாக இது காணப்படுகின்றது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய துறைகளின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் என்பவற்றினைக் கருத்திற்கொண்டு, பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பன மீதான எறிவுகளிற்கான இடர்நேர்வுகளின் மதிப்பீடொன்றினை வழங்குவதனையும் அறிக்கை நோக்காகக் கொண்டுள்ளது.
இவ்வறிக்கையினூடாக, மத்திய வங்கியின் அண்மைய நாணயக் கொள்கைத் தீர்மானங்களுக்கான நியாயபூர்வதன்மையினை தொடர்பூட்டுவதனூடாக அதன் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறும் தன்மையினையும் மேம்படுத்துவதற்கு மத்திய வங்கி முயற்சிக்கின்றது.


