தற்போது நாட்டில் நிலவி வரும் வறட்சியான வானிலையில் 12.02.2026 முதல் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மத்திய, ஊவா மாகாணங்கள், அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் 2:00 மணிக்குப் பிறகு ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது










