பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நாளை உந்துவப் பௌர்ணமி தினத்தில் இன்று (26) ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை ரயில்வே மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியவை சிவனொளிபாதமலை புனித யாத்திரைக்கான சிறப்பு ரயில் மற்றும் பஸ் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
புனித யாத்திரை மற்றும் டிசம்பர் கிறிஸ்மஸ் விடுமுறையின் போது யாத்திரீகர்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக வழமையான ரயில் சேவைகளை மேற்கொள்வதற்காக இன்று கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும் கண்டியிலிருந்து பதுளை மற்றும் பதுளைக்கு கண்டி வரையிலும் விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.
ஹட்டன் ரயில் நிலையத்தில் ஓய்வெடுக்கும் இடங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், ஹட்டன் ரயில் நிலையத்தில் இருந்து நல்லதண்ணிக்கும் நல்லதண்ணியிலிருந்து ஹட்டனுக்கும் ஒன்றிணைந்த பஸ் சேவைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புனித யாத்திரை சீசனுக்காக ரயில் நிலையங்களில் கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்படும், மேலும் வார இறுதி மற்றும் நீண்ட வார இறுதி நாட்களில் வழக்கமான ரயில்களுக்கு கூடுதலாக சிறப்பு ரயில்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபையின் ஸ்ரீ பாத யாத்திரை சிறப்பு பஸ் சேவை டிசம்பர் 26 செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. யாத்திரை காலம் முடியும் வரை இந்த விசேட சேவையை தொடருமாறு அமைச்சர் கலாநிதி குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
ஹட்டன் ரயில் நிலையத்தில் இருந்து நல்லதண்ணிக்கு பஸ் சேவையும், கொழும்பிலிருந்து ஹட்டன் வீதி ஊடாக நல்லதண்ணிக்கு பஸ் சேவையும், கொழும்பிலிருந்து நோட்டன் ஊடாக நல்லதண்ணியாக்கு பஸ் சேவையும் இயங்கும், மேலும.