இந்தியாவில் பயோமெட்ரிக் விபரங்கள் (biometric) அடங்கிய இலத்திரனியல் கடவுச்சீட்டு (E-Passport )பயன்பாட்டை இந்திய வெளியுறவுத்துறை அமுலுக்கு கொண்டுவந்துள்ளது.
இந்த இலத்திரனியல் கடவுச்சீட்டின் கடைசி பக்கத்தில் RFID chip, ஆன்டெனா பொருத்தப்பட்டு தனிபட்ட தரவுகள், கை ரேகை, முக தரவு ஆகியவை டிஜிட்டல் என்கிரிப்ஷன் முறையில் பதிவுசெய்யப்படும்.
இதனால் விபரங்களை திருடவோ, மாற்றவோ முடியாது. இதனால் போலி கடவுச்சீட்டு மோசடிகள் தடுக்கப்படும், விமான நிலையங்களில் கடவுச்சீட்டு சரிபார்ப்பு நேரம், மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.