ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 3.16 மணியளவில் ரிச்டர் 4.9 அளவிலும், காலை 7 மணியளவில் ரிச்டர் 5.2 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ரிச்டர் 4.6 அளவிலும், ரிச்டர் 4.5 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, நேற்று ரிச்டர் 4.1, 5.8, 4.5, 4.8 அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் ஆப்கானிஸ்தானில் 8 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் வாழும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாக வில்லை.