காலஞ்சென்ற அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் இறுதிக்கிரியை தொடர்பான அறிவிப்பு தற்போது வௌியாகியுள்ளது.
அதற்கமைய, அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் பூதவுடல் எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை கண்டி அஸ்கிரிய பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் பூரண அரச அனுசரணையுடன் தகனம் செய்யப்படவுள்ளது.
தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், 20.07.2025 ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
காலமாகும் போது அவருக்கு வயது 67 ஆகும்.