தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாரஹேன்பிட்டையில் மூன்றாவது அரசு உரிமையிலான ஒசுசல கிளையை திறந்து, தரமான மற்றும் மலிவு விலையில் மருந்துகளை அணுகுவதற்கு விரிவாக்கம் செய்யும் நோக்கத்துடன் இது திறந்து வைக்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நாடு முழுவதும் 130 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகள் மற்றும் முக்கிய தனியார் வைத்தியசாலைகளுக்கு அருகில் ஒசுசல கிளைகளை அமைக்கும் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இது இருப்பதாக கூறினார்.
நாரஹேன்பிட்டையில் திறக்கப்பட்ட கிளை, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் (SPC) 65ஆவது கிளையாகும்.
மருந்து விநியோகத்தில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கும், எதிர்காலத்தில் மருந்து தட்டுப்பாடுகளை தடுப்பதற்கும் ஒசுசல வலையமைப்பை விரிவாக்கி வருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
2024இல் 68 விலைமனுக்களை மட்டுமே கொண்டிருந்த அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 268 விலைமனுக்களை வெளியிட்டு, கொள்முதல் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. அடுத்ததாக வட்டுக்கோட்டை, கேகாலை, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் ஒசுசல கிளைகள் திறக்கப்படவுள்ளன.










