அரச பேருந்துகளில் பயணிகளுக்கோ அல்லது யாருக்கோ அநீதி இழைக்கப்பட்டால் 1958 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்யுமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (பெப்ரவரி 27) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இவ்வாறான ஒழுக்கமற்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு ஒழுக்காற்று தண்டனை வழங்கப்படுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “மற்ற ஓட்டுநர்களுடன் ஒப்பிடும்போது அரச பேருந்து ஓட்டுநர்கள் அதிக ஒழுக்கம், நட்பு மற்றும் பாதுகாப்பான நபர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்