கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 15வது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பேருந்து வீதியை விட்டு விலகி முன்பக்க பகுதி பள்ளத்தை நோக்கி வழுக்கிச் சென்று நின்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த 13 பேர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து 11.01.2025 காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது