நாடாளுமன்றத்தில் உணவு உண்ணும் எம்.பி.க்களிடம் வசூலிக்கும் தொகையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதுவரை காலமும் எம்.பி.க்களிடம் இருந்து காலை உணவுக்கு 100 ரூபாயும், மதியம் 300 ரூபாயும் மட்டுமே வசூலிக்கப்பட்டது.
எனினும் அந்தத் தொகை போதாது என, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.
அத்தோடு, நாடாளுமன்ற ஊழியர்களின் விடுமுறை கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்நது.
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்ததாக அரசாங்க தகவல்கள் குறிப்பிட்டன.
நாடாளுமன்றத்திற்கு மாத்திரம் விசேட கவனம் செலுத்தினால் அது மோசமான முன்னுதாரணமாக அமையும் என பொருளாதார ஆலோசகர்கள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியிரந்தமை குறிப்பிடத்தக்கது.