ஹாலிஎல மற்றும் உடுவர இடையிலான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, பதுளை-கொழும்பு புகையிரத கடவையில் 175/50 மைல்கல் அருகில் மண் மேடு சரிந்து விழுந்ததில் புகையிரத சேவை நிறுத்தப்பட்டது.
தற்போது புகையிரத திணைக்கள அதிகாரிகள் புகையிரத கடவையை சீரமைத்துள்ளனர்.
எனவே, 02.12.2024 முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.