கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திருமதி. கார்மென் மோரேனோ அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஐரோப்பிய ஒன்றியத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து 2023 அக்டோபர் 24ஆந் திகதி காலை 12.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

