[10:18 PM, 10/18/2023] +94 71 602 2505: கொழும்பு
அங்கவீனமுற்றோரின் அமைப்புக்களின் ஒன்றிணைந்த முன்னணியின் நாடளாவிய ரீதியில் உள்ள செவிப்புலன், பார்வை மற்றும் உடலியல் ரீதியாகஊனமுற்ற குழந்தைகள்
பார்வையிடும் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற நடைமுறை தொடர்பில் புரிதலை பெற்றுக்கொள்வதற்கு மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இது ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின், பொதுமக்கள் வெளித்தொடர்பு பிரிவினால் அவர்களுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பான தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டது.
அதனையடுத்து இவர்கள், அங்கவீனர்கள் தொடர்பான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெருமவைச் சந்தித்து சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது, தமது சமூகத்தினர் முகங்கொடுக்கும் சிக்கல்கள் மற்றும் சவால்கள் தொடர்பில் அவர்கள் விடயங்களை முன்வைத்தனர். தமக்கு சமூகத்தில் விசேட வாய்ப்புகள் அன்றி, சம வாய்ப்புகளே வழங்கப்பட வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
தற்பொழுது அங்கவீனமுற்றவர்களுக்குத் தேவையானவற்றை வழங்குதல் மற்றும் சம வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் சமூகத்தில் என்றுமில்லாத வகையில் கலந்துரையாடல் உருவாகியுள்ளமை சாதகமான விடயம் என பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இதன்போது அங்கவீனர்கள் தொடர்பான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைப் பிரதித் தலைவர் கௌரவ (சட்டத்தரணி) மதுர விதானகே, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜயந்த சமரவீர மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஆகியோரும் அங்கவீனமுற்றோரின் அமைப்புக்களின் ஒன்றிணைந்த முன்னணியின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்தைப் பார்வையிட்டதை அடுத்து அவர்கள் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், இதன்போது பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தனவும் இணைந்துகொண்டார்.
[10:23 PM, 10/18/2023] +94 71 602 2505: இலங்கை – வியட்நாம் தலைவர்கள் சந்திப்பு
இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார, சமூக, கலாசார தொடர்புகளைப் பலப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை – வியட்நாம் ஜனாதிபதி தெரிவிப்பு
தென்கிழக்காசியா மற்றும் இலங்கைக்கு இடையிலான தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்வதற்கான களமாக வியட்நாமை மாற்றியமைக்க தயாரெனவும், இலங்கை மற்றும் வியட்நாமுக்கிடையிலான பொருளாதார, சமூக, கலாசார தொடர்புகளைப் பலப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் வியட்நாம் ஜனாதிபதி வோ வென் தோக் (Vo Van Thuong) தெரிவித்தார்
சீனாவில் நடைபெறும் பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்புத் திட்டத்தின் மூன்றாவது சர்வதேச மாநாட்டிற்கு இணையாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வியடநாம் ஜனாதிபதி வோ வென் தோக் (Vo Van Thuong) ஆகியோருக்கிடையிலான இருதரப்பு சந்திப்பு இன்று (18) பீஜிங் நகரில் நடைபெற்றது.
இருநாடுகளிலும் தாக்கம் செலுத்தும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்தாலோசித்த அதேவேளை, இலங்கை மற்றும் வியட்நாமுக்கு இடையிலான இருதரப்பு தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்ளும் நோக்கில் இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களின் தலைமையில் செயல்திட்டம் ஒன்றை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால எதிர்பாப்புக்கள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதன்போது விளக்கமளித்தார்.
சரிவடைந்திருந்த வியட்நாம் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பப் பின்பற்றிய செயன்முறைகள் தொடர்பிலும் அதன்போது எதிர்கொண்ட சவால்கள் தொடர்பிலும் வியட்நாம் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இருநாடுகளுக்கும் இடையில் பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும், இலங்கையில் விவசாய துறையை நவீனமயப்படுத்துவது தொடர்பிலும் இருநாட்டு தலைவர்களும் கலந்தாலோசித்தனர்.
ஒன்றினைந்து முன்னோக்கிச் செல்லும் பாதைக்கான புதிய பிரவேசம் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உள்ளிட்டவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
