
ASM .JAVID- COLOMBO
ஹிஜ்ரி 1445 ரபிஉனில் ஆகிர் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று(15) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றது.
இதன்போது நாட்டின் எப்பாகத்திலும் தலைப்பிறை தென்பட்டதற்கான ஊர்ஜீதம் செய்யப்பட்ட எவ்வித தகவல்களும் கிடைக்கப் பெறாமையினால் நாளை திங்கற்கிழமை மாலையுடன் ரபிஉல் அவ்வல் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நாளை 16ஆம் திகதி மஹ்ரிபுடன் ரபிஉனில் ஆகிர் மாதம் ஆரம்பமாகின்றது என நாட்டு மக்களுக்கு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழு உத்தியோக பூர்வமாக அறிவித்தது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பிறைபார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழுத் தலைவர் மௌலவி எம்.பி.எம்.ஹிஸாம் அல்- பத்தாஹி தலைமையில் இடம் பெற்றது. இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைவர் எம்.தாஹிர் ரஸீன் உள்ளிட்ட பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை பிரதிநிதி மௌலவி அப்துல் முக்சித், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அலா அஹமட் உள்ளிட்ட திணைக்கள அலுவலர்கள், வளிமண்டல திணைக்கள அதிகாரி மொஹமட் ஸாலிகீன், பள்ளிவாசலின் முன்னாள் தலைவர் தௌபீக் சுபைர், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிகையாளர்கள், மேமன் சங்க உறுப்பினர்கள், ஏனைய பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தரீக்காக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.