கொழும்பு
இலங்கையில் இந்த மாதத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2000-ஐ தாண்டியுள்ளது.
அண்மைக்காலமாக பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல்களின்படி, இந்த மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2,003 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த மாதங்களை விட இந்த மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் என சுகாதார திணைக்களம் முன்னரே கணித்திருந்த நிலையில், இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்து 881 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை டெங்கு அபாய வலயங்கள் 07 ஆக குறைந்துள்ள போதிலும், தற்போதைய மழையினால் அது மேலும் அதிகரிக்கலாம் என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது