

எஸ். சினீஸ் கான்
தம்பலகாமம் தாயிப் முஸ்லிம் வித்தியாலயத்தின் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தேவையான வகுப்பறைக் கட்டிடம் இல்லாமல் மாணவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்த குறையை நிவர்த்தி செய்யும் முகமாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்யினால் கட்டிட நிர்மாண வேலைகள் சனிக்கிழமை (16) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிண்ணியா நகர சபையின் முன்னாள் தவிசாளர் நிவாஸ், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இமாம் ஆசிரியர், பாடசாலை அதிபர் கஸிருள்ளா உட்பட அனைவரும் கலந்துகொண்டனர்.