(அஸ்ரப் ஏ சமத்)
தெஹிவளையில் உள்ள சர்வதேச தாதிய மருத்துவ கல்லூரியின் (INA Campus ) 2024 மற்றும் 2025ஆம் கல்வி ஆண்டுக்காக தாதியர், உளவியல், மற்றும் மருந்தக கற்கைநெறிகளுக்கான டிப்ளோமா, உயர் டிப்ளோமாக்களுக்கான பட்டம் வழங்கும் வைபவம் சனி (19) பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் ( பி.எம்.ஐ.சி.எச்) இல் நடைபெற்றது. இக் கல்லூரியின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான ரிமாஸா முனாப் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினரும் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் . கௌரவ அதிதிகளாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, இலங்கை மாலைதீவு மலேசியா நாட்டின் கவுன்சிலர் மொஹம்மட் டியுமிங், விஞஞான தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.எம். நவவி, அல் ஆலிமா வைத்தியர் மரீனா தாஹா றிபாய், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்.எம்.எஸ். நபீஸ், மட்ட்ககழப்பு ்இரீடா தொழிற்பயிற்சி நிலையத்தின் தலைவர் பொறியியலாளர் ரீ. மயுரன், மற்றும் எம்.எச்.எம்.. நிசார் பிரதி அதிபர் இப்பாகமுவ அல் அஸ்ரக் மா.. வித்தியாலயம் மற்றும் வாசனா பிரதம தாதியும் அதிதிகலாக கலந்து கொண்டு பட்டங்களின் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
விசேட பட்டத்தினை டொக்டர் மொஹமட் நிசார் மொஹமட் நஜாத் உயர் டிப்ளோமா உளவியல் மற்றும் கவுன்சிலிங் (Psychology & Counseling ) அதிதிகளிடமிருந்து பெற்றுக் கொள்வதனையும் படத்தில் காணலாம் .


