தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் உத்தியோகபூர்வ இலட்சணையை ஏனைய பயிற்சி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்துவதற்கு எதிராக அந்நிறுவனம் பொது எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
எந்தவொரு நிறுவனமும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் உத்தியோகபூர்வ இலட்சணையை பயன்படுத்த அங்கீகரிக்கப்படவில்லை என்றும், அத்தகைய எந்தவொரு நடவடிக்கையும் சட்டவிரோதமாக கருதப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறையில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு பயிற்சி நிறுவனங்களுடனும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம் படிப்புகளை வழங்கவோ அல்லது கூட்டாளியாகவோ இல்லை என்றும், மூன்றாம் தரப்பினரால் நடத்தப்படும் படிப்புகளை கண்காணிக்கவோ அல்லது சரிபார்க்கவோ இல்லை என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் பங்குதாரர்களால் உத்தியோகபூர்வமாக நடத்தப்படும் பட்டறைகள் அல்லது விழிப்புணர்வு திட்டங்களுக்குப் பொருந்தாது என்று வலியுறுத்தியுள்ளது.










