அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் அதாவுல்லா தார் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவின் எந்தவொரு இராணுவ தாக்குதலுக்கும் பாகிஸ்தான் நிச்சயமாக பதிலடி கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்றும், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை தான் மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான நிபுணர் ஆணைக்குழு மூலம் நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பதாக கூறியபோதிலும், இந்தியா மோதல் பாதையைத் தெரிவு செய்கிறது என்றும் அவர் கூறினார்.